ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அயல்வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவர்கள் மின் இணைப்பை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மகன் மின் தாக்குதலுக்கு இலக்கானத்தை தொடர்ந்து தாய் காப்பற்ற முயன்ற போது அவரும் மின்சாரத் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 38 வயதுடைய ஒரு பெண்ணும் அவரது 05 வயது மகனுமே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.