‘திருமண சுதந்திரத்தை தடை செய்வது முட்டாள்தனம்’

இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தை தடை செய்வது அரசின் முட்டாள்தனமான செயற்பாடு என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜையொருவர் வெளிநாட்டு பிரஜையொருவரை திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டுமென்ற சுற்றறிக்கை பற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வெளிநாட்டவரை திருமணம் செய்வதற்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையானது கேலிக்கூத்தான ஒன்று என்பதுடன், இந்த தீர்மானம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் எற்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நாகரிகமான அரசு ஒருபோதும் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றாது என சுட்டிக்காட்டிய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாட்டின் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை வெளிப்படையாக மீறும் இந்த ஒழுக்கக்கேடான செயற்பாடுகளை வெறும் சர்வாதிகாரத்தின் கீழ் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்றும் சாடினார்.

'திருமண சுதந்திரத்தை தடை செய்வது முட்டாள்தனம்'

Social Share

Leave a Reply