ஓய்வை அறிவித்தார் ஜீவன் மெண்டிஸ்

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜீவன் மெண்டிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையுடன் கடந்த 20210ஆம் ஆண்டு முதல் ஒரு நம்பமுடியாத பயணம் இது. 2010ஆம் ஆண்டு முதல் இலங்கையின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன்.

இந்த அற்புதமான பயணம் முழுவதும் நான் கற்றுக்கொண்ட பல மதிப்புமிக்க பாடங்கள் மற்றும் அழகான நினைவுகளாகும். அந்தவகையில் எனது பயிற்சியாளர்கள் மற்றும் சக அணியினருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் என்றென்றும் உங்களுடனேயே நன்றியுடன் இருக்கின்றேன் ‘எனத் தெரிவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்தார் ஜீவன் மெண்டிஸ்

Social Share

Leave a Reply