வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் நிறைவு

ஜனவரி 3ஆம் திகதி முதல் அனைத்து அரச துறை ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க பொதுச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கான சுற்றறிக்கை இன்று (30/12) வெளியிடப்படுமென, அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி தெரிவித்தார்.

முன்னதாக, ஒவ்வொரு துறை சார்ந்த தலைவர்களுக்கு தங்கள் ஊழியர்களை குறிப்பிட்ட சதவீதத்தில் மாத்திரம் வரவழைப்பதற்கு, அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அந்த ஒழுங்குமுறை திருத்தப்பட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களும் தங்கள் வழக்கமான பணிகளைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என அவர் கூறினார்.

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் நிறைவு

Social Share

Leave a Reply