சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு கோரிக்கை

டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி லாஃப் எரிவாயு விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு  கோரிக்கை

Social Share

Leave a Reply