சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காக வருகை தந்திருந்த நபரொருவர் தனக்குத்தானே தீயிட்டுக் கொழுத்திக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (03/01) அதிகாலை 1.30 மணியளவில் நல்லத்தண்ணி பிரதேசத்தில் வாகன தரிப்பிடத்தில் வைத்து குறித்த நபர் தனக்குத்தானே தீயிட்டு கொழுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த நபர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்றும் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் காரணமாக தனக்குத் தானே தீயிட்டுக் கொழுத்திக் கொண்டிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
