கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமை பரிசல் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி இன்றாகும். பரீட்சை திணைக்களத்துக்கு கிடைக்க விண்ணப்பங்கள் மிகவும் குறைந்தளவே.
உயர்தர பரீட்சைக்கு 2922 விண்ணப்பங்களும்,புலமைபரிசில் பரீட்சைக்கு 6589 விண்ணப்பங்களுமே கிடைக்கப்பெற்றுளளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிபர் ஆசிரியர் சங்க சம்பள முரண்பாட்டு போராட்டம் மற்றும் தபால் சேவை தாமதம் என்பன விண்ணப்பங்கள் குறைவாக இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். பாடசாலை பரீட்சார்த்களது விண்ணப்பம் பாடசாலைகளினாலேயே அனுப்பப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.