தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது.
இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
