பணத்திற்காக தனியார் வைத்தியசாலையில் குண்டு வைக்கப்பட்டது

கடந்த 14 ஆம் திகதியன்று கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. முக்கிய நபர்கள் வந்து போகும் வைத்தியசாலை என்ற காரணத்தினால் முக்கிய புள்ளிகளை குறிவைத்து குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் வைத்தியசாலையின் கழிவறையில் குண்டினை வைத்தவரை பொலிசார் கண்டு பிடித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் தானே குண்டினை வைத்ததாக பொலிசாரிடம் ஒத்துகொண்டுள்ளார்.

தானே அந்த கைக்குண்டை குறித்த வைத்தியசாலையில் வைத்ததாக தெரிவித்துள்ள அவர் தானே வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து அங்கே குண்டிருப்பதாக தெரியபப்டுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் வைத்தியசாலையினால் தனக்கு பணம் பரிசாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் சொன்ன கதை உண்மையானதா என்பது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

பணத்திற்காக தனியார் வைத்தியசாலையில் குண்டு வைக்கப்பட்டது

Social Share

Leave a Reply