நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்யும்

நாட்டின் சில பாகங்களில் இன்று
மழை அல்லது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடும் என
எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல்
திணைக்களம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் இந்த விடயம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ
மற்றும் வடமேல் மாகாணங்களின்
சில பாகங்களிலும் காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களின் சில
பகுதிகளிலும் மாலை அல்லது இரவு
வேளையில் மழை அல்லது இடியுடன்
கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், அநுராதபுரம் மற்றும்
வவுனியா ஆகிய பகுதிகளிலும்
அவ்வப்போது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்யும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version