குறைந்த மாணவர்களை கொண்டுள்ள பாடசலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிப்பதற்காகன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. நேற்று (15.09) சுகாதர அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் இலங்கையில் 5000 காணப்படுவதாவும்,சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் அவற்றை மீள திறப்பது தொடர்பிலேயே நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் படி தரம் 01முதல் தரம் 06 வரையான பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்கும் நடவடிக்கைகளே இடம்பெற்று வருகின்றன.
எவ்வாறான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற தயார்படுத்தல்கள் நடைபெற்று வருவதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல தெரிவித்த அதேவேளை, ஆசிரியர் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான தடுப்பூசிகள் முழுமையாக ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.