அனுராதபுர சிறை கைதிகளை சந்திக்கிறார் நாமல்

அனுராதபுர சிறை கைதிகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் சந்திக்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.


அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கடிதம் மூலம் அவசர சந்திப்புக்கு கோரியதற்கு இணங்க இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் இராஜாங்க அமைச்சர் அனுராதபுரத்தில் உள்ள சிறை கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதற்கும் இந்த சந்திப்புக்கும் எதுவும் சந்திப்பு உள்ளதா என்பது தொடர்பில் எந்த தகவல்களும் வெளிவரவில்லை.


அமைச்சர் நாமல் ராஜபக்சவின் சந்திப்பின் பின்னர் இந்த சந்திப்பு குறித்த செய்திகள் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

அனுராதபுர சிறை கைதிகளை சந்திக்கிறார் நாமல்

Social Share

Leave a Reply