பதவி விலகினார் மின்சார சபை தலைவர்

இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C பெர்னாண்டோ, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலை 19 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் தலைவராக பொறுப்பேற்ற இவர் குறுகிய காலத்துக்குள் பதவி விலகியுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை மின்சார சபைக்குள் பல சிக்கல் நிலைகள் உருவாகியுள்ள நிலையிலும், மின்வெட்டு சர்ச்சைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும் M.M.C பெர்னாண்டோ பதவி விலகுகின்றமை கவனிக்க வேண்டிய விடயமாக அமைந்துள்ளது.

பதவி விலகினார் மின்சார சபை தலைவர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version