ஹிஸ்புல்லா வழக்கு – பிணை வழங்க மறுப்பு

இருபது மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் சம்மதம் தெரிவித்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்பதனால் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை உத்தரவை நிராகரித்துள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஏப்ரலில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது பயங்கரவாத தடுப்பு மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 20 ஆம் திகதி, சட்டமா அதிபர் திணைக்களம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என கூறியிருந்தது.

எனினும் இந்த வழக்கு இன்று (28/01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகள் புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தால் மாத்திரமே பிணை வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா வழக்கு - பிணை வழங்க மறுப்பு

Social Share

Leave a Reply