மலையக மக்களுக்கான ஆவண வரைபு-மனோ

மலையக தமிழ் மக்களின் அபிலாஷை ஆவண வரைபு மலையக விற்பன்னர்களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இந்த விடயம் தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஆலோசனை சபை விற்பன்னர்-உறுப்பினர்கள் மத்தியில் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக, ஏனைய மலையக அரசியல், சிவில் தரப்புகளுடன் உரையாடப்பட்டு ஆவணத்தின் இறுதி வடிவம் தயாரிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மலையக அபிலாஷை ஆவண விண்ணப்பம், இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல், சமூக தலைவர்கள், தமிழக முதல்வர், தமிழக கட்சிகள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூக தரப்புகளிடம் கையளிக்க/சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கான ஆவண வரைபு-மனோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version