இன்றைய வாநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று(10.02) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ள அதேவேளை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version