பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இலங்கை வந்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கொழும்பை அவர் வந்தடைந்துள்ளார். கொழும்பில் நடைபெறும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின நிகழ்வு மற்றும் அதனோடு இணைந்த நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
இரண்டு தினங்கள் வடக்கிற்கு தனிப்பட்ட ரீதியிலான பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை தமிழ் தேசிய கூட்டமைப்பே சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நுவரெலியா சென்றதோடு, சீதாஎலியா ஆலயத்துக்கும் சென்றுள்ளார்.

