திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியில் தன்னுடைய மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். காயமுற்ற பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வீ.திவ்யா (30வயது) எனவும் தெரியவருகின்றது.
நேற்று (22.06) பிற்பகல் 3.00மணியளவில், குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் வந்து கணவர், மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டி காயமுற்ற நிலையில் அயலவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து வந்ததுள்ளதோடு, மனைவியை கத்தியால் வெட்டிய குறித்த கணவரை பிரதேச மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
