அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகின்றனர் – சாணக்கியன் MP

அமெரிக்க சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக தாம் அறிந்துள்ளதாக பாராளுமனற்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இப்போது ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பும் நிலையம் உருவாகியுளளது என அவர் தெரிவித்த்துள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவர்கள் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மட்டுமே. ஆனால் தற்போது நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களே இவ்வாறு கோஷங்களை எழுப்புகின்றனர் என தெரிவித்த அவர் மேலும் கீழுள்ளவாறு தனது உரையில் தெரிவித்தார்.

இவ்வாறு கோஷங்களை எழுப்புவதற்கான பிரதான காரணங்களாக நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு, நாட்டில் எரிவாயு இல்லை. அதேபோன்று நாட்டில் உரம் இல்லை. சீனி கொள்வனவில் மோசடி, பி.சி.ஆர் செய்வதில் மோசடி. இவற்றிற்கு எல்லாம் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரம் காரணம் இல்லை.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுமே காரணம்.
நாங்கள் இன்று வனஜீவராசிகள் அமைச்சு குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர்தான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் அம்பாறையில் காடுகளை அழித்து மரமுந்திரிகை செய்கின்றார். இங்குள்ள மட்டக்களப்பு அரச பாராளுமன்ற உறுப்பினர் மண் கொள்ளைக்கு துணை போகின்றார். தகுதி இல்லாதவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கினால் இந்த நிலைதான் ஏற்படும்.
தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.
ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை எனில் அவரை வாயினை மூடி அமைதியாக இருக்குமாறு கூறுங்கள். சிறுபான்மையினரின் மதங்களான இந்து, கிறிஸ்தவம் மற்றும் இசுலாமிய மதங்களை இழிவு படுத்தும் பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றார்.

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு விதமாக காணப்படுகின்றது.

ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்.

அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகின்றனர் - சாணக்கியன் MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version