ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவியிலிருந்து விலகவேண்டுமென கட்சி தலைவர்களது கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் பதவியிலிருந்து விலக மாட்டேன் என தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
இதன் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக அறிவிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் அவரின் வீட்டில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை பெரும்பான்மையினரால் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஒருவார காலத்துக்கு சபாநாயகரை ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டுமெனவுவம், அந்த காலத்துக்குள் அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது என்பதுமே முடிவாக எடுக்கப்பட்டுள்ளது.