போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சு பதவியினை இராஜினாமாக செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அத்தோடு தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள், ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென கோரியுள்ள நிலையில் தான் பதவி விலகுவதாகவும், அறிவித்துள்ளார்.