பிரதமர் பதவிக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு சபாநாயர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது போன்று அனைத்து கட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு இந்த நடவடிக்கையினை எடுக்குமாறு மேலும் அவர் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பதவி விலகுவதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படாத நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியினை ஏற்றுக்கொண்டு, பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க கோரியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
