ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அமைச்சர் தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானியாவின் தெற்காசிய பிராந்திய அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் கலந்துரையாடல்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், பிரித்தானியாவின் தெற்காசிய, ஐக்கிய நாடுகள், பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் தொலைபேசியில் இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், நீதி என்பன தொடர்பில் அவர் ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்துவது தொடர்பிலும் ஆரோக்கியமான உரையாடல் இடம்பெற்றதாகவும் லோர்ட் தாரிக் அஹமட்ம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா இந்த விடயங்கள் தொடர்பிலும், இலங்கைக்கான உதவிகள் தொடர்பிலும் தன்னுடைய ஆதரவை வழங்கும் என்ற உறுதியும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version