சீன கப்பலின் வருகை; இந்திய எல்லைப்பகுதியில் கண்காணிப்பு.

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் யுவன் வொங் 05 நேற்று(16.08) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில்; இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.

அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காக சர்வதேச கடல் எல்லை பகுதிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு வலயத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நேற்று(16.08) காலை முதல் ஹெலிகொப்டர்கள் கடலில் தொடர்ந்து தாழ்வாக கண்காணித்து வருகிறன.

மேலும் இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply