முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

பலாங்கொடையிலிருந்து ஹட்டன் செல்லும் பிரதான வீதியின் பின்னவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் பலாங்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் அமர்ந்து சென்ற நபர் விபத்தில் காயமடைந்துள்ளதோடு பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தார்.

31 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்தும்,விபத்து தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version