தற்போது இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதத்தின் முதல் 4 நாட்களில் இந்தியாவிலிருந்து அதிக பட்சமாக 844 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலா பயணிகளும் அக்காலப்பகுதியிலேயே இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.