நகர்ப்புற மற்றும் பிரதான பாடசாலைகளில் மாணவர்களின் பாடசாலை பைகளை பரிசோதிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சில பாடசாலைகளுக்கு போதைப்பொருட்களை அனுப்ப பாடசாலை சிறுவர்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்
பாடசாலை பைகளை பரிசோதித்தல் தொடர்பில் அடுத்த வாரம் சுற்றறிக்கையில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.