ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினரும் 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியினரும் நாளை காலை இலங்கை வந்தடையவுள்ளனர்.

இதனை தொடர்ந்து, நாளை காலை 6.30 மணியளவில் இரு அணியினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில்,அவர்களை வரவேற்று உற்சாகபடுத்துமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி ஊடக பிரிவு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version