மின் வெட்டு நீடிப்புக்கு மறுப்பு

நாளை(22.09) முதல் மின் வெட்டு நேரத்தை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை பொதுச் சேவைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

இதன் காரணமாக நாளைய தினம் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களே மின் தடை அமுல் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை உரிய காரணங்களை முன் வைக்காமையினால் இந்த மின் வெட்டு நேர அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லையென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply