உயர்தர பரீட்சை காலத்தில் மின் தடை ஏற்படுமா?

ஜனவரி 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பதில் அளித்துள்ளது.

இன்று (10.01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

“பரீட்சைக் கால மின்வெட்டு தொடர்பில், பரீட்சைகள் ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த திட்டத்திற்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான செயற்திட்டங்களை தற்போது தயாரித்து, அதற்கான வேலைகளை இன்று ஆரம்பித்துள்ளோம். பரீட்சைக் காலத்தில் மின்தடை அமுல்படுத்துவது நியாயமான விடயம் அல்ல. எனவே அட்டவணையை மாற்றுவோம். மின்வெட்டை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த திட்டத்தை தயாரிக்குமாறு பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு தேவையான ஆவணங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் நாங்கள் ஏற்கனவே சமர்பித்துள்ளோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை காலத்தில் மின் தடை ஏற்படுமா?

Social Share

Leave a Reply