தமிழர் விடுதலை கூட்டணி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது.

 

தமிழர் விடுதலை கூட்டணி இன்று(18.01) வவுனியா மாவட்ட செயலகத்தில் காணப்படும் தேர்தல் திணைக்களத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர், இளைஞர் அணியின் தலைவர், வவுனியா நிர்வாக பொறுப்பாளர் கணேசநாதன் சபேசன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா தெற்கை உத்தமிழ் பிர௫அதேச சபை ஆகியவற்றில் தமிழர் விடுதலை கூட்டணி வவுனியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது.

வவுனியாவில் திறமையானவர்களையும் மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்களை இந்த தேர்தலில் தாம் களமிறக்கவுள்ளதாக கட்டுப்பணம் செலுத்திய பின்னர் சபேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 

தமிழர் விடுதலை கூட்டணி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version