ஆர்ஜெண்டினா – கார்போடா பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வினால் அச்சம் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
