புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

2022ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version