தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டம்!

எதிர்வரும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 9ம் திகதி போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் செலவழிக்கப்படும் வரிப்பணத்தில் கிடைக்கும் நன்மைகளில் சிக்கல் இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version