இன்றும் அதிக மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் தென் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவேளை, களுத்துறை முதல் காலி வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யும். காற்றானது வடகிழக்கு திசையாக வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும், சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் அதிக மழைக்கு வாய்ப்பு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version