குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி அதிர்ஷ்டலாப சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போலி அதிர்ஷ்டலாப சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (25.01) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 232 போலி அதிர்ஷ்டலாப சீட்டுகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (26) குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
