‘சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டுள்ளது’ – ஹரின் பெர்னாண்டோ

கடந்த மாதம் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 31ம் தேதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், சுற்றுலாத் துறையின் ஊக்கத்தால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2022 ஜனவரி மாதத்தில் 82,327 சுற்றுலாப் பயணிகளும், 2023 ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகளும் வருகைதந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் 96,507 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 106,500 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரலில் 62,980 சுற்றுலாப் பயணிகளும், மே மாதம் 30,207 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதம் 32,856 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதம் 47,293 பேரும், ஓகஸ்ட் மாதம் 47,293 சுற்றுலாப் பயணிகளும், 2022இல் மொத்தம் 719,978 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

'சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டுள்ளது' - ஹரின் பெர்னாண்டோ
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version