சீனாவின் உத்தரவாதம் போதிய அளவானதாக இல்லை!

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு சீனா வழங்கிய கடன் உத்தரவாதம் போதிய அளவானதாக இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு திட்டதிற்கு IMF தரநிலைகளுக்கு அமைவான மற்றும் நம்பகமான உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை இலங்கைக்கு விரைவில் பெற்றுக் கொடுப்பதே அமெரிக்காவின் நம்பிக்கை என உதவி இராஜாங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நூலன்ட் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்டார்.

இவர் நேற்று (31 .01) இலங்கை வந்தடைந்ததுடன், இன்று (01.02) இரவு கட்டார் செல்லவுள்ளார்.

சீனாவின் உத்தரவாதம் போதிய அளவானதாக இல்லை!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply