வானிலையில் மாற்றம்!

நாட்டை கடந்து சென்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் கொண்டு நாட்டை விட்டு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், காலநிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்று முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்று வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தென் மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வானிலையில் மாற்றம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version