இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07.02) அதிகாலை 2 மணியளவில் களுத்துறை கட்டுகுருந்த குரே மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகளில், நேற்று (06.02) அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
