7 மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கங்கணி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
நிதி பிரச்சினைகள் தொடர்பில் திறைசேரியுடன் கலந்துரையாடி ஒரு முடிவினை எடுப்பதாக தேர்தல் ஆணைக்குழு தமக்கு தெரிவித்துள்ளதாக கங்கணி கல்பனா லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
திறைசேரி 400 மில்லியன் ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதுவரையில் தேர்தல் அச்சிடும் பணிகளுக்காக 700 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
