மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
