நிதியமைச்சின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், அரச அச்ச கூட்டுத்தாபன ஆணையாளரும் தற்போதைய ஜனாதிபதியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் அரசியலமைப்பு,மக்கள் இறையாண்மை, இந்நாட்டின் அதியுயர் சட்டம் என்பவற்றை மீறி ஜனாதிபதி தேர்தல் திகதிகளை அறிவிக்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் நேற்று(21.02) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.
