கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு!

எதிர்வரும் 4ம் திகதி சனிக்கிழமை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 2 மணி முதல் கொழும்பு 1-4 மற்றும் 7-11 ஆகிய பகுதிகளிலும், கடுவெல நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும், கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளுக்கு 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த நீர்த்தாங்கிக்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புனரமைக்கப்படவுள்ளதால், நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version