இன்றும் மழைக்கு வாய்ப்பு!

இன்று (11.03) ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்கள். 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழையின்போது ஏற்படும் இடி மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்றும் மழைக்கு வாய்ப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version