பயணிகளின் செளகரியம் கருதி இன்று (15.03) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களிலிருந்து கொழும்பு வரை 13 அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.