இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களிலும் மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் இரவு நேரங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் ஓரளவு மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply