ரயிலில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதிகளுக்கு பிணை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயிலில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (17.03) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் போசாக்கு தேவையை கருத்தில் கொண்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பது நன்மை எனக் கருதி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிணை கிடைத்ததும் இன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை நன்னடத்தை உத்தியோகத்தர் விடுத்த கோரிக்கையை அடுத்து, அவர்களின் கண்காணிப்பின் கீழ் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version