இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை இன்றுமுதல் (29.03) விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விநியோக நடவடிக்கைகள் இன்று (29.03) மாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டதால், 35 ரூபாவுக்கு முட்டை ஒன்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை 90 நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.