ஊவா, மத்திய, தெற்கு, சப்ரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று (01.04) மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காலை வேளையில் 50 மி.மீ க்கும் அதிககமான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.